14 20
இந்தியாஏனையவைசெய்திகள்

இந்தியாவில் தொடரும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்: இலக்கு வைக்கப்பட்டுள்ள 50 விமானங்கள்

Share

இந்தியாவில் தொடரும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்: இலக்கு வைக்கப்பட்டுள்ள 50 விமானங்கள்

இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகி அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 2 – 3 நாட்களில் வெவ்வேறு விமானங்களை குறிவைத்து பல அச்சுறுத்தல்கள் விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. எனினும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சிறுவன் ஒருவனை தவிர வேறு எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதேநேரம், இதுபோன்ற அச்சுறுத்தல்களை அனுப்புபவர்களை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் வரையான காலப்பகுதிக்குள் இண்டிகோ விமான நிறுவனம் தனது 10 விமானங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறியிருந்தது.

இதன் காரணமாக, குறைந்தது மூன்று விமானங்கள் இலக்கு பயணங்களில் இருந்து மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. ஆகாசாவின் பெங்களூர் – வாரணாசி விமானத்துக்கும் இன்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அச்சுறுத்தல்கள் தமக்கு கிடைத்ததாக எயார் இந்தியா தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...