20 9
ஏனையவை

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

Share

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

பலஸ்தீனத்தில் போர் முடிவுக்கு வரும் வரையில், இஸ்ரேலுடன் பணயக்கைதிகளுக்கான கைதிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் இருக்காது என ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தைகள் தொடர்பாக மத்தியஸ்த நாடுகளுடன் தொடர்ந்து அழைப்புகள் விடுத்த வருகின்ற போதிலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கம் தடுமாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் அரசியல் காரணங்களுக்காக முட்டுக்கட்டை இடுவதாக அல்-ஹய்யா கூறியுள்ளார்.

மேலும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவில்லை என்றால், எதிர்ப்பு மற்றும் குறிப்பாக ஹமாஸ், கைதிகளை ஏன் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தாயராக இருப்பதாக ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளதுடன், அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துபவர் நெதன்யாகு என்பதை யாதார்த்தம் நிரூபிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு அமெரிக்கா நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...