1 36
ஏனையவை

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா!

Share

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா

ஸ்ரேலின் (Israel) இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மத்திய டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இராணுவ தலைமையகம் மீது இன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது, ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டதாகவும், இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானில் இருந்து வந்த இரண்டு ட்ரோன்களை வடக்கு இஸ்ரேலில் வைத்தே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், எந்த ட்ரோன்களும் மத்திய இஸ்ரேலை அடைந்ததாகவோ அல்லது இராணுவ தலைமையகத்திற்கு அருகில் வந்ததாகவோ அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்படுகிறது.

டெல் அவிவில் உள்ள இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மையமாக இருக்கும் இந்த தளம், போர் அமைச்சரவை உட்பட பல இராணுவ நிறுவனங்களின் தலைமையகத்தை கொண்டுள்ளது.

அத்தோடு, இந்த தலைமையகத்தின் மீதான தாக்குதல் அறிவிப்பு தொடர்பில் இஸ்ரேலிய தரப்பில் இருந்து உடனடி கருத்துகள் வெளியிடப்படவில்லை.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...