24 662f0411a01d0
இலங்கைஏனையவைசெய்திகள்

மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

Share

மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

இலங்கை இளைஞர் ஒருவர் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை போட்டி நிகழ்ச்சி ஒன்றின் குரல் தெரிவு சுற்றில் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞரே இவ்வாறு இசை போட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர இரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை திறமையாக பாடியதை பார்த்தும் கேட்டும் இசை அரங்கமே ஆர்ப்பரித்தது.

இந்திரஜித் குறித்த போட்டியில் பங்குபற்றி சிறப்பாக பாடல்களை பாடியதுடன், நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

முன்னதாக மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு சென்று குறித்த தென்னிந்திய இசை நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அசானியையடுத்து, தாய்மண்ணுக்கு பெருமை சேர்ப்பதற்காக இசை மேடையேறியிருக்கும் இந்திரஜித்தின் இந்த இசை முயற்சி பலரால் பேசப்படுகிறது.

மேலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிசா தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...