7 1 scaled
ஏனையவை

வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி

Share

வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி

ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும் என ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் சில பகுதிகளில், குறிப்பாக பவேரியா மாகாணத்தில், Alternative for Germany (AfD) என்னும் வலதுசாரிக் கட்சிக்கு வரலாறு காணாத அளவில் ஆதரவு அதிகரித்துவருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த AfD கட்சியினர் இனவெறுப்பாளர்கள் என பெயரெடுத்தவர்கள். ஜேர்மானியரல்லாத வெளிநாட்டினர் என்று தெரிந்தாலே அவர்கள் மீது வெறுப்பு காட்டுபவர்கள் இந்த கட்சியினர். புலம்பெயர்ந்தோரையும் சிறுபான்மையினரையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்நிலையில், பவேரியாவில் உள்ளூர் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பவேரியாவில் AfD கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெளிப்படையாகவே வெளிநாட்டவர்களை விமர்சிக்கிறார்.

மருத்துவமனைகள், பள்ளிகள் என எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் அவர், வெளிநாட்டவர்களை ஜேர்மனியிலிருந்து வெளியேற்றவேண்டும்.

ஜேர்மனியை வெளிநாட்டவர்களிடமிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகள் முழுவதும் ஜேர்மன் மொழி பேசாத வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் நம் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்கும் என்கிறார் அவர்.

ஆனாலும், இப்படி புலம்பெயர்தலை, வெளிநாட்டவர்களை எதிர்க்கும் AfD கட்சிக்கு எல்லோரும் ஆதரவு தரவில்லை. அதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும், அக்கட்சிக்கு ஆதரவு பெருகிவருவதால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என புலம்பெயர்ந்தோர் அச்சமடைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

Share

1 Comment

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...