குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!
அரசியல்இலங்கைஏனையவை

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

Share

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன கூறினார்.

இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும நிவாரண கொடுப்பனவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, 28 இலட்சம் பேர் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங் கப்படவுள்ளனர். இதனை நாம் 40 இலட்சம் வரை அதிகரிக்க முடியும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கம்

ஆனால் பெறப்படும் அல்லது பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும். உண்மைத் தகவல்களை வழங்காமல் அரசியல் ரீதியாகவும் பல்வேறு வகையிலும் கடந்த காலங்களில் சனசவிய, மற்றும் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை மறுசீரமைப்பு செய்து உண்மையாக கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாகும். ஏழைத்தன்மையை தொடர்ந்து வைத்திருந்து அதன்மூலம் அரசியல் செய்ய நாம் விரும்பவில்லை.

அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கப் படாதவர்கள் அவர்களின் கோரிக்கைளை நிகழ்நிலையிலும் அல்லது பிரதேச செயலகத்தில் அல்லது ஜனாதிபதி காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும். அதனை விடுத்து கூக்குரலிட்டு பயனில்லை. எவ்வளவு காலத்துக்கு எம்மால் கூக்குரலிட முடியும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய காலத்திலும் சண்டையிட்டு கொள்கின்றனர். சண்டையிடுவதன் நோக்கம் அவர்கள் அரசாங்கத்துக்கு சரியான யோசனைகளை முன்வைக்க முன்வருவதில்லை. அவர்களிடம் முன்வைப்பதற்கான சரியான திட்டம் எதுவுமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...