gold1 1
ஏனையவை

20,000 கோடிக்கு தங்கம் அடகுவைப்பு!!

Share

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 200 பில்லியன் ரூபாய் (20,000 கோடி) பெறுமதியான தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர கற்கைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியன் ரூபாய் (19,300 கோடி) பெறுமதியான தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அரச அங்கிகாரம் பெற்ற 13 வர்த்தக வங்கிகள் மற்றும் 10 அடகு அல்லது நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்கத்தை அடகு வைத்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் அடகு மையங்கள் தங்கத்தின் பெறுமதிக்கு அதிக பணத்தை வழங்குவதன் காரணமாக அவற்றை அதிகளவான நுகர்வோர் நாடுவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...