gold1 1
ஏனையவை

20,000 கோடிக்கு தங்கம் அடகுவைப்பு!!

Share

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 200 பில்லியன் ரூபாய் (20,000 கோடி) பெறுமதியான தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர கற்கைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியன் ரூபாய் (19,300 கோடி) பெறுமதியான தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அரச அங்கிகாரம் பெற்ற 13 வர்த்தக வங்கிகள் மற்றும் 10 அடகு அல்லது நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்கத்தை அடகு வைத்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் அடகு மையங்கள் தங்கத்தின் பெறுமதிக்கு அதிக பணத்தை வழங்குவதன் காரணமாக அவற்றை அதிகளவான நுகர்வோர் நாடுவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...