பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மாணவன்!! குவியும் பாராட்டு!!
ஏனையவை

பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மாணவன்!! குவியும் பாராட்டு!!

Share

பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மாணவன்!! குவியும் பாராட்டு!!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த தவேந்திரன் மதுஷிகன் இளம் வயதில் பாக்கு நீரினையை நீந்தி சாதனைப்படைத்துள்ளார்.

இந்த முயற்சிக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால் நேற்று (03.04.2023) கல்லடி இராணுவ முகாமில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மாணவனின் சாதனையினை பாராட்டி மட்டக்களப்பு பாடுமீன் கழகத்தின் தலைவர் புஸ்பாகரனினால் பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பிறிகேட் கொமாண்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து நினைவுச்சின்னமொன்றினை வழங்கி கௌரவமளித்துள்ளனர்.

இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30 கிலோமீற்றர் தூரமுடைய பாக்கு நீரினையை சுமார் 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.

இவர் இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ளதுடன், இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர்.சுஜாதா குலேந்திரகுமார், பாடுமீன் கழகத்தின் தலைவர் புஸ்பாகரன், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர், மாவட்ட சாரண ஆணையாளர் வீ.பிரதீபன், மதுஷிகனின் பெற்றோர், மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சாரண ஆசிரியர்கள், சாரண மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Coconut Daily Ceylon
ஏனையவை

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடி விற்பனை!

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை உயர்வைக் கட்டுப்படுத்த தென்னை...

25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...