யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அண்மையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைக்கு தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும்...
காரைநகர் கசூரினா கடலில் இன்று பகல் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் தில்லையம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த யோகேஸ்வரன் யோகீசன் (18) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு ...
யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த...
பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 01-01-2022 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார் டக்ளஸ் திரவப்பாலின் விலையும் அதிகரித்தது! ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்!...
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை ஒன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு...
புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை குறைந்த...
நாட்டில் தற்போது கையிருப்பில் காணப்படும் எரிபொருள் 20 நாட்களுக்கு போதுமானது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் கம்பனியின் செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கிகள்...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை...
யாழில் இருந்து கொழும்பு சென்ற உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் இன்று நண்பகல்...
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன. https://tamilnaadi.com/news/2022/01/01/worship-by-lighting-lamps-at-nallur-kandaswamy-temple/ #SriLankaNews
நாஹினி சீரியலில் நடிக்கும் நடிகை சிவன்யாவை பார்ப்பதற்காக மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. தொலைக்காட்சி தொடர்களிற்கு அடிமையாகிய 13,11,7 வயதான மூன்று சிறுமிகளே வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறித்த மூன்று சிறுமிகளும்...
கடந்த 2021ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 15.86 பில்லியன் பெறுமதியான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 74 சந்தர்ப்பங்களில்...
மதுபான போத்தல்களில் ஜனவரி 3ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுமென கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் கபில குமாரசிங்ஹ தெரிவித்தார். இதன்மூலம் திறைசேரிக்கான வருவாயை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம் நாளை நடைபெறவுள்ளது. அமரர் நேசதுரை நிலக்சன் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட கண்டு அறக்கொடை நிதியத்தினரால் , இந்தக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை...
நாட்டில் உள்நாட்டு பால்மா மற்றும் திரவப்பால் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கடந்த மாதம் 15 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார். இந்தநிலையில், இன்று காலை நிதி அமைச்சர் டுபாயிலிருந்து EK650 என்ற...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவர்களுடன் மேலதிக வகுப்புக்களை...
பல எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே குடும்ப ஆட்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச அரசை விரட்டியடிக்கவேண்டும். இதற்காக அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என நட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய...
கடந்த வருடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இவ் விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவிக்கையில், கடந்த வருடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம்...