மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
இன்றைக்கோ நாளைக்கோ என ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகி ராஜினாமா செய்யக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் ரணில் விக்ரமசிங்க, அவர்களுக்கு ஒக்சிஜன் கொடுத்து காப்பாற்றுகின்ற வகையில் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசிய...
எதிர்வரும் 6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று பிரதமரும் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இரண்டு வருட நிவாரணத் திட்டத்துக்கு...
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதையும், பதவிகள் வகிப்பதையும் தடுக்கும் ஏற்பாடு கட்டாயம்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நிதி அமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது. இதன்படி புதிய நிதி அமைச்சராக, ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்பார் என தெரியவருகின்றது. நிதி அமைச்சு பதவியை ஏற்பதற்கு, அலிசப்ரியும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளார். அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் நெருங்கிய சகாவான வடிவேல் சுரேஷ், பிரதமர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண...
நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகரும் சமூக செயற்பாட்டாளருமான கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமர்...
சர்வக்கட்சி இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில், அங்கம் வகிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதம அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய அமைச்சரவை பெயர் பட்டியலில் இலங்கைத் தொழிலாளர்...
ராஜபக்சக்களை பாதுகாத்து, நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கமீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்....
மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து...
” புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும். அப்போது அவர்களால் துணிந்து முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது – என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன், வரப்பிரதாசங்களும் குறைக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார்....
” லிற்றோ நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து உடன் விசாரணைகளை ஆரம்பியுங்கள்.” இவ்வாறு கோப்குழுவின் தலைவருக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பணிப்புரை விடுத்தார். ” சமையல் எரிவாயு கப்பல் துறைமுகம் வந்தும், நேற்றிரவு 8...
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத் தவிர, ஏனைய அரச ஊழியர்கள் நாளைய (20) தினம் பணிக்கு வரவேண்டியதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்....
” வடக்கில் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகக் கைதிகளாக உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை உடனடியாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு எடுப்பது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை விவாதத்துக்குக் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் ஆளும் கட்சியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டமை வெட்கம் கெட்ட வேலை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்து மீண்டும் நாடாளுமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் இன்று கலந்தாலோசனை...