tamilni 363 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதி ரணில்

Share

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதி ரணில்

இலங்கை பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவால் ஜனாதிபதியில் பெயரில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்ரமசிங்க (President Tamil Wickremesinghe) என்று தவறாக எழுதப்பட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியிட்ட செய்திக்குறிப்பில், இந்த தவறு விடப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் பிரதமர் அலுவலகம் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், இரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.பி.விக்னேஸ்வரன், அதிபர் கவிதா ஜயவர்தன மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு அறிவித்ததையடுத்து பிழை திருத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...