rtjy 330 scaled
இலங்கைசெய்திகள்

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம்

Share

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம்

முன்மொழியப்பட்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு (IPSA) கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு புதிய நாடாளுமன்ற தரநிலைகள் யோசனையின் கீழ் அமைக்கப்படும், இந்த நிலையில், சட்டமூலத்தின் பூர்வாங்க வரைவு தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டதுடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படுவதை உத்தேச சட்டம் உறுதி செய்யும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள யோசனையின் முக்கிய நோக்கங்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறை ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், அதன் மூலம் நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...