அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லமும் போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குருணாகலை பகுதியில் உள்ள மஹிந்தவின் தற்காலிக இருப்பிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
அரசுக்கு ஆதரவு வழங்கிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான் வீதியில் உள்ள அவரின் வீடுமீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினரின்...
அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பத்திரவின்...
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது....
நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிரணி அரசியல் பிரமுகர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தற்போது களமிறங்கியுள்ளனர். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு இன்று நுழைந்த அரச ஆதரவாளர்கள்,...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் மிகப்பெரும் கண்டனப் போராட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது, வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களதும் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம்...
நாளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும்...
” கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால், ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு தயார்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதி பதவி...
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராகப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றிரவு காளிக்குப் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு தப்பு அடித்து, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. #SriLankaNews
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில்...
🛑 அரசியல் நெருக்கடி உச்சம் – கஜானாவும் காலி 🛑 திங்கள் மஹிந்த இராஜினாமா 🛑 பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு அழைப்பு 🛑 நிபந்தனையுடன் ஐக்கிய மக்கள் சக்தி பச்சைக்கொடி 🛑 18 மாதங்களுக்கு...
அவசரகாலச் சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜிநாமா செய்யுமாறும்...
அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை, சபாநாயகரை...
நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டம் இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்த மாணவர்கள் நாடாளுமன்றத்தின் நுழைவுப் பகுதியான பொல்துவ...
கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலக முன்றலில் உள்ள தடையை அகற்றுமாறு பொலிஸார் முன்வைக்கவிருந்த கோரிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதி பிரதம நீதிவான் முன்னிலையில் முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். காலிமுகத்திடலில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இலங்கை முழுவதும் இன்று ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அரச, தனியார் துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் மக்கள்...
அரசுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ். நகர் பகுதியில் இன்று துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்...
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,...