Anura Dissanayake in Parliament.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவுடன் கைசாத்திடப்படவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

Share

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை இதுவரை காலமும் பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ முன்வைக்கப்படவில்லை.

இது நாட்டின் எரிசக்தி துறையையும் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.

இவ் ஒப்பந்தம் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இவ் ஒப்பந்தம் NFC Sri Lanka Power Holdings  என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் தான் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...