police
செய்திகள்இலங்கை

யாழில் இளைஞர் ஒருவரின் மோசமான செயல்! – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Share

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் மது போதையில் இளைஞன் ஒருவர், தாய் மீதும் வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும், குறித்த இளைஞர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன், வீட்டில் இருந்த வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு பொலிஸாரை வெட்ட முயற்சித்துள்ளார்.

அதனையடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், இளைஞனை கைதுசெய்துள்ளனர். அத்துடன், இளைஞனிடம் இருந்த வாளையும், பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...