யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் மது போதையில் இளைஞன் ஒருவர், தாய் மீதும் வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
எனினும், குறித்த இளைஞர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன், வீட்டில் இருந்த வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு பொலிஸாரை வெட்ட முயற்சித்துள்ளார்.
அதனையடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், இளைஞனை கைதுசெய்துள்ளனர். அத்துடன், இளைஞனிடம் இருந்த வாளையும், பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment