thavamani ajmeer 1
செய்திகள்உலகம்

கணவனைக் கொன்ற இளம் பெண்-அதிர்ச்சி சம்பவம்!!

Share

கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு நடந்ததை அடுத்து மனைவி கணவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அமத்தியும் கொலைசெய்துள்ளார்.

காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அயலவர்களுக்கு தெரிவித்தார்.

தகவலறிந்த வில்லியனூர் பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் கணவனைக் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது-25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 28 ஆம் திகதி தகராறு அதிகமானது.

இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என எல்லோரிடமும் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...