thavamani ajmeer 1
செய்திகள்உலகம்

கணவனைக் கொன்ற இளம் பெண்-அதிர்ச்சி சம்பவம்!!

Share

கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு நடந்ததை அடுத்து மனைவி கணவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அமத்தியும் கொலைசெய்துள்ளார்.

காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அயலவர்களுக்கு தெரிவித்தார்.

தகவலறிந்த வில்லியனூர் பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் கணவனைக் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது-25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 28 ஆம் திகதி தகராறு அதிகமானது.

இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என எல்லோரிடமும் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...