23 64fcfd737213d
உலகம்செய்திகள்

ரசாயனம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட கனேடிய இளைஞர்

Share

ரசாயனம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட கனேடிய இளைஞர்

விவாதத்துக்குரிய ஒன்ராறியோ நபரிடம் இருந்து உயிரைக் கொல்லும் ரசாயனம் வாங்கி தமது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கனேடிய தாயார் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒன்ராறியோவை சேர்ந்த கிம் ப்ரோஸர் என்பவர் தெரிவிக்கையில், தமது மகன் 19 வயது ஆஸ்டின் ஒன்ராறியோவை சேர்ந்த 57 வயது கென்னத் லா என்பவரிடமிருந்து சோடியம் நைட்ரைட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கென்னத் லா மீது ஒன்ராறியோவில் மட்டும் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆஸ்டின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் அன்பான உள்ளம் என குறிப்பிட்டுள்ள கிம் ப்ரோஸர்,

தமது மகன் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், உளவியல் ரீதியாக அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை தமக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு தமது மகன் தற்கொலை எண்ணம் வருவதாகவும் குறிப்பிட்டு,

என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை என பகிர்ந்துகொண்டதை கிம் ப்ரோஸர் பகிர்ந்துகொண்டுள்ளார். 20 வயது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் எஞ்சியிருந்த நிலையில், மார்ச் மாதம் ஆஸ்டின் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஒன்ராறியோவில் தற்கொலைக்கு ஆலோசனை வழங்கியது அல்லது தூண்டியது தொடர்பில் 14 வழக்குகளை கென்னத் லா தற்போது எதிர்கொள்கிறார். மேலும், 40 நாடுகளில் சுமார் 1,200 ரசாயன பொதிகளை கென்னத் லா அனுப்பி வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, 2020ல் இருந்தே கென்னத் லா தமது சட்டவிரோத இணைய பக்கத்தை நடத்தி வந்துள்ளார் என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் 232 பேர் அந்த இணைய பக்கம் ஊடாக ரசாயனம் வாங்கியுள்ளனர். இதில் 88 பேர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...