உலகம்செய்திகள்

500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்

Share

500 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்

உலகில் 500 பேரிடம் மட்டும் இருக்கும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் முதன்முதலில் 1300ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் (passport) தான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக பார்க்கப்படுகிறது.

அதுதான், மால்டாவின் இறையாண்மை ராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆர்டர் ஆஃப் மால்டா பாஸ்போர்ட். சாவரின் மிலிட்டரி-யின் உறுப்பினர்களுக்கு என தனி நாடு, சாலைகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கென கார் ஓட்டுநர் உரிமம், ஸ்டாம்ப், நாணயம் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளனர்.

1300ம் ஆண்டு முதல் முதலாக இந்த ஆர்டர் ஆஃப் மால்டா என்ற பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது, இந்த பாஸ்போர்ட் மூலம் தூதர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று தங்கள் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

2ம் உலகப் போருக்கு பிறகு பல்வேறு நாடுகளின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியது. இந்த பாஸ்போர்ட்கள் உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள இந்த பாஸ்போர்ட், இயேசுவின் இறையாண்மை தூதரக உறுப்பினர்கள், தலைவர்கள், அவர்களது குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.

பாஸ்போர்ட்டில் நிறுவனத்தின் பெயர் தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது, இந்த பாஸ்போர்ட்டை சுமார் 100 ஆண்டுகள் பயன்படுத்த முடியும், ஏனென்றால் இதன் உறுப்பினர்கள் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதன் உறுப்பினர்கள் 85வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. மொத்தம் 44 பக்கங்கள் கொண்ட இந்த பாஸ்போர்ட்டின் பின்பக்கத்தில் மால்டீஸ்-ன் சிலுவை அச்சடிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...