tamilnif 3 scaled
உலகம்செய்திகள்

உலகின் முதல் Space Hotel: இப்போதே முன்பதிவு செய்யலாம்

Share

உலகின் முதல் Space Hotel: இப்போதே முன்பதிவு செய்யலாம்

அமெரிக்க நிறுவனம் ஒன்று, உலகின் முதல் விண்வெளி ஹொட்டலை திறக்க இருக்கிறது.

அமெரிக்க நிறுவனமான Above Space என்னும் நிறுவனம், Voyager Station மற்றும் Pioneer Station என்னும் இரண்டு விண்வெளி நிலையங்களை நிறுவ இருக்கிறது. அவற்றில் ஒன்றான உலகின் முதல் விண்வெளி ஹொட்டல் என்னும் பெருமையைப் பெற இருக்கும் Pioneer Stationஇல் 28 பேர் தங்கலாம். இந்த விண்வெளி ஹொட்டல், அடுத்த ஆண்டிலிருந்து இயங்க உள்ளது.

Voyager Stationஇலோ, 400 பேர் தங்கும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விண்வெளி மையம், 2027இலிருந்து இயங்க உள்ளது.

இந்த ஹொட்டல் அறைகளில், ஒரு கட்டில், ஒரு சிறிய மேசையுடன், ஜன்னல் வழியாக பூமியைப் பார்க்கும் வசதியும் இருக்கும்.

இந்த ஹொட்டல் அறைகளில் பூமியில் இருப்பதுபோலவே உட்காரவும், படுத்திருக்கவும் முடியும் வகையில் செயற்கை புவியீர்ப்பு விசை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹொட்டலிலுள்ள ஒரு பெரிய அறையில் மக்கள் விண்வெளி வீரர்களின் அனுபவத்தைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அங்கு மக்கள் விண்வெளி வீரர்களைப்போலவே அந்தரத்தில் மிதக்கலாம்.

நான்கு முதல் 18 மணி நேரம் வரை பிடிக்கும் இந்த பயணத்துக்கான செலவு, 55 மில்லியன் டொலர்கள். இப்போதே உங்கள் இடத்துக்காக முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்கிறது Above Space நிறுவனம்.

Share
தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...