24 664ef987f2729
உலகம்செய்திகள்

சுவிஸ் பூங்கா ஒன்றில் ஆடையின்றித் திரிந்த இளைஞரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்

Share

சுவிஸ் பூங்கா ஒன்றில் ஆடையின்றித் திரிந்த இளைஞரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்

சுவிட்சர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றில் ஆடையின்றி அலறியபடித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில், 19 வயது இளைஞர் ஒருவர் ஆடையின்றி சத்தமிட்டபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் பெண்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அவரால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் படுகாயம் அடையவே, அவசர உதவிக்குழுவினரும் பொலிசாரும் அங்கு விரைந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தாக்குதல் நடத்திய சுவிஸ் நாட்டவரான அந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...