உலகம்செய்திகள்

பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா..!

Share
31 2
Share

பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா..!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) வங்கதேசத்துக்கு(bangladesh) நாடு கடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை இந்திய அரசுக்கு உள்ளது என்றும், ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த இடைக்கால அரசு இந்தியாவைக் கோரலாம் என்றும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம்.டி. தவ்ஹித் ஹொசைன் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வர இந்தியாவிடம் கோரிக்கை வைக்க இடைக்கால அரசு நிச்சயம் தயாராக உள்ளது என்றார்.

ஷேக் ஹசீனாவை பங்களாதேஷுக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று ஹொசைன் கூறினார்.

இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாகவும், அதற்கான சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் போராட்டத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ஆனால், வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தியதாகவும், மேற்கத்திய ஊடகங்கள் அத்தகைய முறையை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

பங்களாதேஷில் ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...