tamilni 359 scaled
உலகம்செய்திகள்

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்

Share

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கேட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சீன அதிகாரிகளிடம் சுகாதார நிறுவனம் விளக்கம் கோரியுள்ளது.

தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரிகள் நவம்பர் 13ஆம் திகதி செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது நாட்டில் அதிகரித்து வரும் சுவாச நோய் சம்பவங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டதாக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதாலும் சளிக்காய்ச்சல், ‘மைக்கோபிளாஸ்மா நிமோனியா’ எனும் குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான தொற்றுக் கிருமி, சுவாச ஒத்திசைவு கிருமி மற்றும் கொவிட்-19 தொற்று போன்ற நோய்க் கிருமிகளால் சுவாச நோய் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கமைய சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் மேம்பட்ட நோய்க் கண்காணிப்பு தேவைப்படுவதை சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், நோயாளிகளை நிர்வகிக்க சுகாதார முறையை வலுப்படுத்த வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி 2019 பிற்பகுதியிலும் 2020 முற்பகுதியிலும் சீனாவின் வூஹான் நகரில் பரவியதாகக் கூறப்படும் கொவிட்-19 தொற்று சம்பவங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சீன அரசாங்கமும் சுகாதார நிறுவனமும் கேள்விகளை எதிர்நோக்கியுள்ளன.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...