16 13
உலகம்செய்திகள்

பல ஆண்டுகளாக அணையாமல் எரியும் நரக வாசல் : எங்குள்ளது தெரியுமா?

Share

இந்த உலகில் வாழும் மக்களுக்கு “நரகம்” பற்றி நம்பிக்கை உள்ளது. பொதுவாக பாவம் செய்தவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு செல்வார்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் பூமியில் தான் நரகத்திற்கான வாசல் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை யாராலும் அணைக்க முடியாது என கூறப்படுகிறது.

அணையாத நெருப்பு காரணத்தினால் இந்த இடத்தை “நரகத்தின் வாசல்” என அழைக்கிறார்கள்.

ஆய்வுகளின் படி, நரகத்திற்கும் இந்த இடத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. இடைவிடாத நெருப்பு காரணமாகவே இந்த இடம் நரகத்தின் வாசல் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் சொர்க்கத்தின் வாசலில் எங்குள்ளது? நெருப்பு ஏன் அணையாமல் இருக்கிறது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்து கிடக்கும் அபாயங்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு மக்களை அச்சமடைய வைக்கிறது.

கடந்த 1971 ஆம் ஆண்டு, சோவியத் பொறியாளர்கள் துர்க்மெனிஸ்தானின் பாலைவனத்தில் இயற்கை எரிவாயு எங்குள்ளது என தேடிக்கொண்டிருக்கும் பொழுது அழிவு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி எரிவாயு நீர்த்தேக்கத்தை துளைத்து விட்டதால் தரையில் இருந்து சுமார் 230 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்ட ஆழமான பள்ளமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து மீத்தேன் வாயு உடனடியாக காற்றில் கசிய தொடங்கி, நச்சுப் புகை காற்றுடன் கலந்து தீயாக மாறியுள்ளது.

இந்த நரகத்தின் வாசல் பார்ப்பதற்கு ஆபத்தாக இருந்தாலும் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆண்டுதோறும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.

தீப்பிழம்பு நிறைந்த குழி பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் தெரியும். அதிலும் குறிப்பாக இரவில் பாலைவனம் முழுவதும் ஒரு பயங்கரமான ஒளியை பரப்பும்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...