16 13
உலகம்செய்திகள்

பல ஆண்டுகளாக அணையாமல் எரியும் நரக வாசல் : எங்குள்ளது தெரியுமா?

Share

இந்த உலகில் வாழும் மக்களுக்கு “நரகம்” பற்றி நம்பிக்கை உள்ளது. பொதுவாக பாவம் செய்தவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு செல்வார்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் பூமியில் தான் நரகத்திற்கான வாசல் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை யாராலும் அணைக்க முடியாது என கூறப்படுகிறது.

அணையாத நெருப்பு காரணத்தினால் இந்த இடத்தை “நரகத்தின் வாசல்” என அழைக்கிறார்கள்.

ஆய்வுகளின் படி, நரகத்திற்கும் இந்த இடத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. இடைவிடாத நெருப்பு காரணமாகவே இந்த இடம் நரகத்தின் வாசல் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் சொர்க்கத்தின் வாசலில் எங்குள்ளது? நெருப்பு ஏன் அணையாமல் இருக்கிறது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்து கிடக்கும் அபாயங்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு மக்களை அச்சமடைய வைக்கிறது.

கடந்த 1971 ஆம் ஆண்டு, சோவியத் பொறியாளர்கள் துர்க்மெனிஸ்தானின் பாலைவனத்தில் இயற்கை எரிவாயு எங்குள்ளது என தேடிக்கொண்டிருக்கும் பொழுது அழிவு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி எரிவாயு நீர்த்தேக்கத்தை துளைத்து விட்டதால் தரையில் இருந்து சுமார் 230 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்ட ஆழமான பள்ளமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து மீத்தேன் வாயு உடனடியாக காற்றில் கசிய தொடங்கி, நச்சுப் புகை காற்றுடன் கலந்து தீயாக மாறியுள்ளது.

இந்த நரகத்தின் வாசல் பார்ப்பதற்கு ஆபத்தாக இருந்தாலும் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆண்டுதோறும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.

தீப்பிழம்பு நிறைந்த குழி பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் தெரியும். அதிலும் குறிப்பாக இரவில் பாலைவனம் முழுவதும் ஒரு பயங்கரமான ஒளியை பரப்பும்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...