உலகம்செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு

Share
tamilni 337 scaled
Share

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு

அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே உள்ள சிறிய நகரான Falls Township-ல் மர்ம நபர் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு திருடப்பட்ட காரில் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் செயின்ட் பாட்ரிக் தின அணிவகுப்பு (St Patrick’s Day parade) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள Falls Township பொலிஸார், தேடப்படும் சந்தேக நபர் 26 வயதுடைய Andre Gordon என நம்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட Andre Gordon, Levittown பகுதியில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார், பின் மற்றொரு நபரையும் அவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளார்.

அத்துடன் துப்பாக்கி முனையில் கார் திருட்டில் இறங்கிய Andre Gordon, திருடிய காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்டவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனரா அல்லது தற்செயலாக தாக்கப்பட்டனரா என்பது தற்போது தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...