tamilni 337 scaled
உலகம்செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு

Share

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு

அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே உள்ள சிறிய நகரான Falls Township-ல் மர்ம நபர் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு திருடப்பட்ட காரில் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் செயின்ட் பாட்ரிக் தின அணிவகுப்பு (St Patrick’s Day parade) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள Falls Township பொலிஸார், தேடப்படும் சந்தேக நபர் 26 வயதுடைய Andre Gordon என நம்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட Andre Gordon, Levittown பகுதியில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார், பின் மற்றொரு நபரையும் அவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளார்.

அத்துடன் துப்பாக்கி முனையில் கார் திருட்டில் இறங்கிய Andre Gordon, திருடிய காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்டவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனரா அல்லது தற்செயலாக தாக்கப்பட்டனரா என்பது தற்போது தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...