tamilni 338 scaled
உலகம்செய்திகள்

ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்

Share

ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பணி கடினமானது என தெரிவித்துள்ளார்.

இதனால் தினமும் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார்.

ரேடியோ-கனடாவுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது- அரசியலில் இருந்து விலகுவது பற்றி தினமும் யோசிக்கிறேன். ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தினமும் வருகிறது.

நான் செய்வது கிறுக்குப்பிடிக்கவைக்கும் வேலை (crazy job). தனிப்பட்ட தியாகம் செய்ய வேண்டும். நிச்சயமாக, இது மிகவும் கடினம், சில நேரங்களில் அது நன்றாக இல்லை.” என்று கூறியுள்ளார்

ட்ரூடோ தனது மனைவி சோஃபியை (Sophie Grégoire Trudeau) ஆகஸ்ட் 2023-இல் பிரிந்தார்.

திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

கனடாவின் 23வது பிரதமராக ஜஸ்டின் பியர் ஜேம்ஸ் ட்ரூடோ நவம்பர் 2015ல் பதவியேற்றார். ஏப்ரல் 2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

கனடாவில் 2025 அக்டோபரில் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக அங்கு பிரதமருக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுகளில் ட்ரூடோ மிகவும் பின்தங்கியுள்ளார். அவரது புகழ் குறைந்து வருவதாக தெரிகிறது. அவரது லிபரல் கட்சியும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட பின்தங்கியுள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் அரசியலில் இருந்து விலகுவது குறித்து குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அடுத்த தேர்தல் வரை பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...