வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி... பயத்தில் சீன ஜனாதிபதி
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி… பயத்தில் சீன ஜனாதிபதி

Share

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி… பயத்தில் சீன ஜனாதிபதி

பலம் பொருந்திய வாக்னர் கூலிப்படை, தமக்கு ஆதரவளித்துவந்த விளாடிமிர் புடினுக்கு எதிராகவே கிளர்ச்சியில் இறங்கியுள்ளது சீன ஜனாதிபதிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வாக்னர் கூலிப்படை தலைவன் யெவ்கெனி ப்ரிகோஜின் எந்த மோதலும் இன்றி Rostov-on-Don என்ற நகரத்தை கைப்பற்றினார். தொடர்ந்து தலைநர் மாஸ்கோவுக்கு வாக்னர் கூலிப்படையினர் முன்னேறினர்.

ஆனால் தலைநகருக்கு சுமார் 120 மைல்கள் தொலைவில் வைத்து விளாடிமிர் புடினுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, கிளர்ச்சியை கைவிட்டுள்ளனர். மொத்த ரஷ்யாவையும் இரும்புக்கரம் கொண்டு ஆளும் விளாடிமிர் புடினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது வாக்னர் கூலிப்படையின் எதிர்பாராத ஆயுதக் கிளர்ச்சி.

இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் இந்த ஆயுதக் கிளர்ச்சியானது சீன ஜனாதிபதிக்கு உண்மையான பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக மைக் பாம்பியோவின் முன்னாள் சீனக் கொள்கை ஆலோசகரான Miles Yu தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சிக்கல் சீனாவில் எதிரொலிக்கலாம் என ஜி ஜின்பிங் கருதுவதாக Miles Yu குறிப்பிட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது என்கிறார் Miles Yu.

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சியானது மிகவும் செல்வாக்கற்ற ஆட்சிக்கு மாற்று இருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இதுவே சீனாவை மிகவும் பயப்பட வைத்துள்ளது என்கிறார் Miles Yu.

வாக்னர் கூலிப்படை போன்று, ஜி ஜின்பிங் ஆட்சிக்கு எதிராக ஒரு கிளர்ச்சி உருவாகலாம் என்ற அச்சமே அவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது என்கிறார்.

மட்டுமின்றி, 11 ஆண்டுகள் நீண்ட ஆட்சியில் ஜி ஜின்பிங் பல்வேறு ராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் கீழ் செயல்பட்ட பெரும்பான்மையான ராணுவ தலைவர்களை ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார் எனவும் Miles Yu தெரிவிக்கிறார்.

இதனாலையே, கிம் ஜோங் உன் போன்று மிகப்பெரிய பாதுகாப்பு வட்டத்தில் ஜி ஜின்பிங் சீனாவுக்குள் வலம் வருகிறார். இந்த வாக்னர் கிளர்ச்சி சீனத் தலைமையையும் உண்மையில் பயமுறுத்தியுள்ளது, மட்டுமின்றி அரசியல் பொறுப்பில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகலாம் எனவும் அஞ்சுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...