Untitled 1 12 scaled
உலகம்செய்திகள்

கிளர்ச்சியை நிறுத்த புடின் போட்ட ஒப்பந்தம்

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஒரே நாளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய வாக்னர் படையின் தலைவரான யெவ்ஜெனி, விசாரணையைத் தவிர்ப்பதற்காக பெலாரஸ் செல்லவுள்ளார்.

பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றியடைந்ததாகவும், வாக்னர் படையின் தலைவர் ரஷ்யாவில் கிளர்ச்சியை நிறுத்தியதாகவும் நேற்று செய்தி வெளியானது.

புடின் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டி, ஒரே நாளில் உண்டான பெரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இப்போது Wagner தலைவர் Yevgeny Prigozhin அண்டை நாடான பெலாரஸுக்கு செல்வதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

மஸ்கொவை நோக்கி படையெடுத்ததற்காக எந்த ஒரு வழக்கையும் அவர் எதிர்கொள்ள மாட்டார் என்று ரஷ்யா அறிவித்தது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தியதற்காக யெவ்ஜெனி பிரிகோஷ் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என்றும், அவருடன் இணைந்த வீரர்கள் மீது வழக்குத் தொடரப்பட மாட்டாது என்றும் அறிவித்தார்.

கிளர்ச்சியில் பங்கேற்காத அவரது வாக்னர் குழுவைச் சேர்ந்த போராளிகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமைச்சகம் வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.\

இந்த நேரத்தில் புடின் யெவ்ஜினி பிரிகோஷினுக்கு என்னென்ன சலுகைகளை வழங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல பில்லியன் டொலருக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கலாம் தகவல்கள் கசிந்து வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...