8,000 வீரர்களுடன் மீண்டும் படை திரட்டும் வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின்
உலகம்செய்திகள்

8,000 வீரர்களுடன் மீண்டும் படை திரட்டும் வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின்

Share

8,000 வீரர்களுடன் மீண்டும் படை திரட்டும் வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின்

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ராணுவ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படை, கடைசி கட்டத்தில் திட்டத்தை கைவிட, தற்போது அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியானது, 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் விளாடிமிர் புடினின் செல்வாக்கிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.

மேலும், எதிர்பாராத இந்த நெருக்கடி, ரஷ்யாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டதை அடுத்து பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படையினர் விசாரணை மற்றும் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும், வாக்னர் கூலிப்படையின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை தங்கள் நாடு பயன்படுத்திக்கொள்ளும் எனவும் பெலாரஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் எல்லையில் இருந்து 142 மைல்கள் தொலைவில், கைவிடப்பட்ட ராணூவ முகாமை வாக்னர் கூலிப்படையினர் பயன்பாட்டுக்கு என பெலாரஸ் அரசாங்கம் அனுமதித்துள்ளது.

உக்ரைன் எல்லைப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், 8,000 வீரர்கள் வரையில் வாக்னர் கூலிப்படை திரட்டியுள்ளதாகவும், இவர்கள் உக்ரைனுக்கு ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து, உக்ரைன் தரப்பில் இருந்து பெலாரஸ் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். முன்னதாக பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுதம் மற்றும் ராணுவத்தினரை உக்ரைனுக்குள் அனுப்பி வைக்க ரஷ்ய ராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மட்டுமின்றி, பெலாரஸ் நாட்டில் ரஷ்ய ராணுவம் முகாமிடுவதற்கும் அங்குள்ள ஜனாதிபதி அனுமதித்திருந்தார். ரஷ்யாவின் அணு ஆயுதங்களும் பெலாரஸ் நாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...