10 32
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் மிருகத்தனத்தை அழுத்தமில்லாமல் நிறுத்த முடியாது! உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி

Share

சர்வதேச தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா நடத்திய இரண்டாவது பாரிய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய ரஷ்ய தாக்குதல்களில் சைட்டோமிரின் வடமேற்குப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 8,12 மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகள் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை, சர்வதேசத் தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், “ரஷ்யத் தலைமையின் மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் இல்லாமல், இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது. தடைகள் நிச்சயமாக உதவும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அமைதியை நாடுபவர்கள் அனைவரும் மாஸ்கோவின் போரை நிறுத்த தங்கள் உறுதியை காட்ட வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், மாஸ்கோவை நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு டசன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...