images 9
உலகம்செய்திகள்

இராஜதந்திர நடைமுறை மீறல்! – பிரிட்டிஷ் தூதர் வெளியேற்றம்

Share

பிரிட்டிஷ் தூதர் இராஜதந்திர நடைமுறைகளை மீறியதால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக மியன்மார் இராணுவம் கூறியுள்ளது.

மியன்மாருக்கான பிரிட்டிஷ் தூதராக பீட் வாவ்ல்ஸ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தலைமைத்தூதர் இல்லாத வேளையில் தற்காலிகத் துணைத்தூதராக அவர் செயல்படுவார் என்று லண்டன் அறிவித்திருந்தது.

மியன்மாரில் நிலவும் அரசியல் குழப்பத்தின் எதிரொலியாக அந்த நடவடிக்கை அமைந்தது. பிரிட்டிஷ் தூதர் என்ற பொறுப்பை அங்கீகரிக்க மியன்மார் இராணுவம் மறுத்துவிட்டது.

கடந்த பெப்ரவரியில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாவ்ல்ஸ் மியன்மார் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அங்குள்ள இராணுவம் அவருக்கு அனுமதி மறுத்தது.

வாவ்ல்ஸ் மியன்மார் இராணுவம் நடத்துவதாகச் சொல்லப்படும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்துச் சொல்பவர். மியன்மாரில் தம்முடைய பொறுப்பு திடீரென முடிவுக்கு வந்துள்ளது என்று வாவ்ல்ஸ் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...