images 9
உலகம்செய்திகள்

இராஜதந்திர நடைமுறை மீறல்! – பிரிட்டிஷ் தூதர் வெளியேற்றம்

Share

பிரிட்டிஷ் தூதர் இராஜதந்திர நடைமுறைகளை மீறியதால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக மியன்மார் இராணுவம் கூறியுள்ளது.

மியன்மாருக்கான பிரிட்டிஷ் தூதராக பீட் வாவ்ல்ஸ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தலைமைத்தூதர் இல்லாத வேளையில் தற்காலிகத் துணைத்தூதராக அவர் செயல்படுவார் என்று லண்டன் அறிவித்திருந்தது.

மியன்மாரில் நிலவும் அரசியல் குழப்பத்தின் எதிரொலியாக அந்த நடவடிக்கை அமைந்தது. பிரிட்டிஷ் தூதர் என்ற பொறுப்பை அங்கீகரிக்க மியன்மார் இராணுவம் மறுத்துவிட்டது.

கடந்த பெப்ரவரியில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாவ்ல்ஸ் மியன்மார் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அங்குள்ள இராணுவம் அவருக்கு அனுமதி மறுத்தது.

வாவ்ல்ஸ் மியன்மார் இராணுவம் நடத்துவதாகச் சொல்லப்படும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்துச் சொல்பவர். மியன்மாரில் தம்முடைய பொறுப்பு திடீரென முடிவுக்கு வந்துள்ளது என்று வாவ்ல்ஸ் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...