உலகம்செய்திகள்

கேப்டனின் 16 ஆம் நாள் காரியத்தில் நிகழ்ந்த அதிசயம் – கருடனாய் உருவெடுத்தாரா விஜயகாந்த்?

Share

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியத்தின் போது ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

கடந்த ஒரு சில மாதங்களாக உடல்நலக்குறைவினால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பினார்.

அதையடுத்து மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவருக்கு இன்று 16 ஆம் நாள் காரியத்தை குடும்பத்தார்கள் செய்துள்ளனர்.

அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது, உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடக்கும் போது வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன.

அவருடைய உடலுக்கு 3 முறை வட்டமிட்ட கருடனை பார்த்து அங்கிருந்தோர் மெய்சிலிர்த்தனர். உடனே பிரேமலதா உள்ளிட்டோர் கருடனை வணங்கியுள்ளனர்.

இதுபோலவே 16 ஆம் நாள் கிரியையின் போதும் நிகழ்ந்துள்ளது. அதை பார்த்த பொதுமக்களும் கேப்டன் விஜயகாந்தை வந்துள்ளார் என நினைத்து வணங்கியுள்ளனர்.

இந்த காட்சிகாண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...