OIP 19
உலகம்செய்திகள்

30 நிமிடங்களில் வலியில்லாமல் இறப்பதற்கு இயந்திரம் கண்டுபிடிப்பு.., எப்படி செயல்படும்?

Share

எந்தவிதமான வலியும் இல்லாமல் அப்படியே இறப்பதற்கு ஒரு இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர்.

வாழ்க்கையில் மீள முடியாத பிரச்சனையில் இருப்பவர்களும், குடும்பத்தாலும், வெளியுலகத்தாலும், உறவுகளாலும் ஏற்படும் பிரச்சனையில் இருப்பவர்களும் தனக்கான முடிவை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் அளித்தும் அவர்கள் துயரமான முடிவை எடுக்கின்றனர்.

இன்னும் சில நாடுகளில் கருணைக் கொலை மற்றும் தற்கொலை ஆகியவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டிலும் தற்கொலை செய்து கொள்வது அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் வலியில்லாமல் இறப்பதற்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Exit International என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த இயந்திரத்தை கண்டுபிடித்து அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த மாதிரியான முடிவுகள் எடுப்பவர்கள் இயந்திரத்தை வாங்கி அதற்குள் படுத்தாலே போதும். 30 வலியில்லாமல் இறப்பை சந்திக்கலாம். இயந்திரத்திற்குள் படுப்பவரின் ஆக்சிஜன் சுவாசிக்கும் அளவை குறைத்து நைட்ரஜன் வாயுவை அதிக அளவில் சுவாசிக்கச் செய்யும். பின்னர் அவர் சுயநினைவை இழந்து இறந்து விடுவார்.

மேலும், இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதற்கு ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகளும் உள்ளன. சிறு விடயங்களுக்கு கூட இந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...