tamilni 138 scaled
உலகம்செய்திகள்

காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி

Share

காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணியால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பெண் ஒரு இஸ்ரேலியர் என கஸ்ஸாம் படையணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காசா எல்லை வேலிக்கு அருகில் உள்ள ஒரு திறந்த வெளியில் இந்த மூவரையும் ஆயுதம் தரித்த இரு போராளிகள் விட்டுவிட்டுச் செல்வதை காணொளி காட்டுகிறது.

எனினும் இது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இக்காட்சிகள் இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சர்வதேச தொலைக்காட்சி ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலிய ஊடகங்கள் இந்த விடுவிப்பு முன்பே நடந்ததாகக் கூறுகின்றன.

மேலும், சிலர் இந்த விடுவிப்பு கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாகவும், ஹமாஸ் அமைப்பானது தனது சர்வதேச மரியாதையை உயர்த்த முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.

இஸ்ரேல் மீதான முன்னோடியில்லாத தாக்குதலின் போது சனிக்கிழமையன்று 150 கைதிகள் ஹமாஸால் கைதுசெய்யப்பட்டனர்.

இச்செயலால் காசா மீது போரை இஸ்ரேல் அறிவிக்க வழிவகுத்தது. இந்நிலையில், ஐந்து நாட்களில் இடைவிடாத குண்டுவெடிப்பானது காசாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உட்பட 1,050 க்கும் மேற்பட்டவர்களைக் பலியாக்கியது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், 5,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் முழு முற்றுகையின் கீழ் உள்ள பாலஸ்தீனிய பகுதியில் 250,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இது ஒரு “மனிதாபிமான பேரழிவு” என்று சர்வதேச ஆய்வாளர்களின் கருத்துக்களில் வெளிப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் சனிக்கிழமை முதல் 155 படை வீரர்கள் உட்பட 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...