14 37
உலகம்செய்திகள்

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

Share

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற மீண்டும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

அவற்றில், பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணமும் ஒன்று.

பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குச் சட்டப்பூர்வமாக கையொப்பமிட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

2015 ஆம் ஆண்டு முதல் முறையாக, புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு பெரிய கூட்டு முயற்சிக்கு அரசாங்கங்கள் கூட்டாக ஒப்புக்கொண்டன.

ஆனால், ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

2021ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்கா மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்தது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்ற சிற்து நேரத்திலேயே, மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...