9
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம்! ட்ரம்புக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு

Share

பல மாதங்களாக நீடித்த கனிம ஒப்பந்த விவகாரம் தொடர்பிலான, சில மணி நேர பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக உக்ரைனும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.

இது ரஷ்யா – உக்ரைன் முறுகலை தனிக்க ட்ரம்புக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும ்கூறப்படுகிறது.

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“எங்கள் தரப்பு கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனியர்கள் கனிம ஒப்பந்த மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்” என ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனியர்கள் அதை மறுபரிசீலனை செய்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைனிய அதிகாரி ஒருவர் வாஷிங்டனுக்குச் சென்றதாகவும் ஆனால், அமெரிக்கா உக்ரைனை இரண்டு கூடுதல் ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் முன்கூட்டியே நிறைவேறப்படாத நிலை காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் இந்த ஒப்பந்தம், ரஷ்யாவுடனான போரில் அமைதி தீர்வைப் பெற ட்ரம்புக்கு சிறந்த வாய்ப்பாகும் என கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் தரப்பானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையுடனான உறவுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக மாறும் என நம்பப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...