9
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம்! ட்ரம்புக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு

Share

பல மாதங்களாக நீடித்த கனிம ஒப்பந்த விவகாரம் தொடர்பிலான, சில மணி நேர பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக உக்ரைனும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.

இது ரஷ்யா – உக்ரைன் முறுகலை தனிக்க ட்ரம்புக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும ்கூறப்படுகிறது.

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“எங்கள் தரப்பு கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனியர்கள் கனிம ஒப்பந்த மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்” என ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனியர்கள் அதை மறுபரிசீலனை செய்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைனிய அதிகாரி ஒருவர் வாஷிங்டனுக்குச் சென்றதாகவும் ஆனால், அமெரிக்கா உக்ரைனை இரண்டு கூடுதல் ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் முன்கூட்டியே நிறைவேறப்படாத நிலை காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் இந்த ஒப்பந்தம், ரஷ்யாவுடனான போரில் அமைதி தீர்வைப் பெற ட்ரம்புக்கு சிறந்த வாய்ப்பாகும் என கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் தரப்பானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையுடனான உறவுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக மாறும் என நம்பப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...