உலகம்செய்திகள்

ஹவுதி நிர்ணயித்த காலக்கெடு

tamilni 373 scaled
Share

ஹவுதி நிர்ணயித்த காலக்கெடு

ஐக்கிய நாடு சபையின் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் ஏமன் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை உத்தரவிட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை, செங்கடல் பகுதியில் நடந்து வந்த சீரான கப்பல் போக்குவரத்தை சீர் குலைத்து உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தினர்.

இதையடுத்து கடந்த 11ம் திகதி ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் இருப்புகளை குறி வைத்து அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து தாக்குதல் நடத்தினர்.

ஆனால் ஈரானுடன் இணைந்த குழுவுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து  இரண்டாவது கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரால் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ஒரு மாத கால அவகாசத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இருக்கும் அதிகாரிகளில், பிரித்தானிய குடியுரிமை கொண்டோர் மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட அதிகாரிகள் உடனடியாக ஏமனை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஜனவரி 20ம் திகதி முதல் ஆன்லைன மூலமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த முன்னெச்சரிக்கை அறிக்கை தொடர்பான தகவலை ஐக்கிய நாடுகள் சபை செய்தி நிறுனமான AFPயிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...