உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

15 8
Share

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிரவாதம் மற்றும் போர் அபாயம் காரணமாக அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் பகுதிக்கு அருகில் கூட பயணிக்கவேண்டாம் என அமெரிக்கா விடுத்துள்ள பயண ஆலோசனை தெரிவிக்கிறது.

கனடாவும், பாகிஸ்தானுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான், மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஈரான் எல்லை பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறும் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் உட்பட விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் பயணம் தொடர்பில் பயண ஆலோசனை வெளியிட்டுள்ளன.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், Dharamshala, Leh, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அம்ரித்ஸர் ஆகிய விமான நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அதனால் விமான புறப்பாடு, வருகை மற்றும் அடுத்தடுத்த விமான சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் முன்னாள்...

11 8
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றத்தைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது...