15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

Share

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிரவாதம் மற்றும் போர் அபாயம் காரணமாக அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் பகுதிக்கு அருகில் கூட பயணிக்கவேண்டாம் என அமெரிக்கா விடுத்துள்ள பயண ஆலோசனை தெரிவிக்கிறது.

கனடாவும், பாகிஸ்தானுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான், மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஈரான் எல்லை பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறும் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் உட்பட விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் பயணம் தொடர்பில் பயண ஆலோசனை வெளியிட்டுள்ளன.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், Dharamshala, Leh, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அம்ரித்ஸர் ஆகிய விமான நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அதனால் விமான புறப்பாடு, வருகை மற்றும் அடுத்தடுத்த விமான சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...