tamilni 200 scaled
உலகம்செய்திகள்

இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு

Share

இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு

இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக களத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி. இவரையும், இவருக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய இருப்பதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயது Tyler Anderson என்பவர் இந்த வழக்கில் உள்ளூர் நேரப்படி திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதிவு செய்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு குறுந்தகவல்களில், அவர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகள் விரைவாகச் செயல்பட்டதாக FBI தாக்கல் செய்துள்ள வாக்குமூலம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த குறுந்தகவல் குறித்து பொலிசாருக்கு உடனடியாக புகார் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் ஆண்டர்சனுக்கு தொடர்புடையது என்ற முக்கிய தகவல்களையும் பரப்புரை நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதுவே ஆண்டர்சனை கைது செய்ய உதவியதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் விடுத்த ஆண்டர்சனை கைது செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுத்த சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆண்டர்சன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் ஆகியவற்றை எதிர்கொள்கிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....