10 37
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

Share

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

டிக் டொக் (Tik Tok) செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் (US) உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு பிறகு, தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் டிக்டொக் குறித்து எவ்வாறான நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில், டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் பாவனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...