உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!
உலகம்செய்திகள்

உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!

Share

உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்திற்கு உட்பட்ட 5 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை கார்கிவ் இராணுவ நிர்வாகத்தின் மாஸ்கோ தலைமையான விட்டலி கஞ்சேவ் ரஷ்ய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் கார்கில் பிராந்தியத்தில் 29 குடியேற்றங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன் உக்ரைனிய படைகள் கிளஸ்டர் குண்டுகளை இப்பகுதியில் தாக்குதலுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதலால் தங்களுடைய வீரர்களால் 17 குடியேற்றங்களில் இருந்து மட்டுமே செயல்பட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைன் ஆயுதப்படை இன்று கார்கிவ்-வின் 10 நகரங்கள் கடுமையான ஏவுகணை அல்லது வான் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யா அறிவித்துள்ள 5 நகரங்களின் கைப்பற்றல் குறித்து எத்தகைய அங்கீகாரமும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....