உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்! மோடி தகவல்!!

4
Share

உக்ரைன் – ரஷ்யா போர்! மோடி தகவல்!!

இரு நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவ எல்லைகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறகையில்,“ சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான்தான், எனது ஒவ்வொரு செயலிலும் நாட்டின் பண்பாட்டு விழுமியங்கள் தாக்கம் செலுத்தும். உலக அரங்கில் இந்தியா இன்னும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும், இடத்தையும் பெற தகுதியுள்ள நாடு.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது குறித்து உறுப்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட வேண்டும். சீனாவுடனான எல்லை பிரச்சினை எனும் போது, இரு நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவ எல்லைகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம்.

இதேபோன்று, உக்ரைன் – ரஷ்யா பிரச்சினையில் இந்தியா நடுநிலையாக உள்ளது என்று கூறுவது தவறு என்றும், அமைதியின் பக்கம் தாங்கள் நிற்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...