24 666d537b54e43
உலகம்செய்திகள்

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது : ஜெலென்ஸ்கி

Share

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது : ஜெலென்ஸ்கி

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கிய நிலையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது.

இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருந்த நிலையில் இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இதற்கிடையே, உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அத்தோடு, ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டுமெனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புடினின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாதென ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புடின் தெரிவித்துள்ள போர் நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார்.

அவரது போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது அத்தோடு ஹிட்லர் (Adolf Hitler) செய்த அதே விஷயத்தை புடின் செய்கின்றார்.

இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்க (America) பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) கருத்து தெரிவிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் அநியாயமான படையெடுப்பால் அவர்களது நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர புடின் விரும்பினால் உக்ரேனிய இறையாண்மையை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.

அமைதியைக் கொண்டுவர உக்ரைன் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட அவர் எந்த நிலையிலும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...