24 666d537b54e43
உலகம்செய்திகள்

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது : ஜெலென்ஸ்கி

Share

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது : ஜெலென்ஸ்கி

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கிய நிலையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது.

இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருந்த நிலையில் இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இதற்கிடையே, உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அத்தோடு, ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டுமெனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புடினின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாதென ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புடின் தெரிவித்துள்ள போர் நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார்.

அவரது போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது அத்தோடு ஹிட்லர் (Adolf Hitler) செய்த அதே விஷயத்தை புடின் செய்கின்றார்.

இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்க (America) பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) கருத்து தெரிவிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் அநியாயமான படையெடுப்பால் அவர்களது நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர புடின் விரும்பினால் உக்ரேனிய இறையாண்மையை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.

அமைதியைக் கொண்டுவர உக்ரைன் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட அவர் எந்த நிலையிலும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...