உலகம்செய்திகள்

வடகொரிய ஆயுதங்களால் ரஷ்ய படைகளை பழி தீர்த்த உக்ரைன்: வெளிவரும் உண்மைகள்

வடகொரிய ஆயுதங்களால் ரஷ்ய படைகளை பழி தீர்த்த உக்ரைன்: வெளிவரும் உண்மைகள்
வடகொரிய ஆயுதங்களால் ரஷ்ய படைகளை பழி தீர்த்த உக்ரைன்: வெளிவரும் உண்மைகள்
Share

வடகொரிய ஆயுதங்களால் ரஷ்ய படைகளை பழி தீர்த்த உக்ரைன்: வெளிவரும் உண்மைகள்

வடகொரிய ராக்கெட்டுகளை பயன்படுத்தி ரஷ்ய படைகள் மீது உக்ரைன் வீரர்கள் தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய ஆயுதங்கள்
வடகொரிய ஆயுதங்களை அதன் நட்பு நாடான ரஷ்யாவின் படைகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவதாக இதுவரை தகவல் ஏதும் வெளியானதில்லை.

ஆனால் சோவியத் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட MLRS கருவிகளை உக்ரைன் வீரர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், வடகொரிய ஆயுதங்களை தங்களது துருப்புகள் பயன்படுத்த விரும்பவில்லை என்றே தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கை சென்று சேர்வதில்லை என்பதுடன், வெடிக்கவும் செய்வதில்லை என உக்ரைன் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் பல ஆயுதங்களும் 1980 மற்றும் 1990களில் உருவாக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, அந்த ஆயுதங்களை நட்பு நாடு ஒன்று வழிமறித்து கைப்பற்றியுள்ளதாகவும், அதில் இருந்தே தங்கள் வசம் அந்த ஆயுதங்கள் வந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அந்த ஆயுதங்கள் ரஷ்யா செல்லும் வழியில் மடக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. ஆனால் வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளதாக ரஷ்யா இதுவரை உறுதி செய்யவில்லை என்பதும் மறுத்தும் வருகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...