tamilni 538 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

Share

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

ரஷ்யாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உக்ரைன் படைகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ விடுமுறையின்போது அந்த நாட்டின் ஏ-50 என்ற விமானத்தை வீழ்த்துவதற்கு உதவிய உக்ரைனின் இராணுவ உளவுத்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக இராணுவ தளபதி மைகோலா ஓலேஷ்சுக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வான்வழித் தாக்குதல் நடப்பதாகவும், தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டதாகவும், இதில், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறி வரும் நிலையில், ரஷ்ய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும், ரஷ்ய படை நடத்திய தாக்குதலில், எதிர்பாராதவிதமாக இந்த விமானம் மீது குண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...