உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

Share

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் திகதியை அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் திகதியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேற்று அறிவித்தார்.

அதன்படி பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பொதுத் தேர்தல் அறிவிப்பை தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டிற்கு தேவையான மற்றும் சரியான தருணத்தில் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், எங்களின் ஜனநாயகத்தின் வலிமையால் அதிகாரம் மக்களிடம் திரும்பும், இந்த தேர்தல் உங்கள் எதிர்காலத்தை மாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் பற்றியது, அத்துடன் பிரித்தானியர்களிடம் நாட்டை உழைக்கும் மக்களின் சேவைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் சர் கீர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...