25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

Share

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு அரிய மண் உலோகங்களை வழங்க சீனா ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு ஈடாக, சீன மாணவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரின் இறுதி ஒப்புதல் மட்டுமே இனி தேவை.

மே மாதம் ஒப்பந்தமொன்று செய்யப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக சிக்கல்களை சரிசெய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதற்கமைய, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்த அதிக வரிகளில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டன.

ஆனால், சீன ஏற்றுமதிகளை அனுமதிப்பது மற்றும் தொழில்நுட்ப மற்றும் மாணவர் விசாக்களுக்கான அமெரிக்க வரம்புகள் உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்ந்தன.

இதனையடுத்து, இரு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பொருளாதார வர்த்தக நிபுணர்களும் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாகும் நோக்கில் செயற்பட்டனர்.

இந்த ஒப்பந்தம் ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே என நிபுணர்கள் கூறினாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலைத் கட்டுப்படுத்த இது உதவுகின்றது.

எவ்வாறாயினும், அமெரிக்க – சீன உறவை வலுப்படுத்தும் முழுமையான வர்த்தக ஒப்பந்தம் இது அல்ல என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...

25 684a2fdb31138
உலகம்செய்திகள்

தென்னாபிரிக்காவில் கடும் வெள்ளம்: மாணவர்கள் உட்பட பலர் பலி

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வெள்ளத்தினால், பாடசாலை பேருந்து...