லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு அரிய மண் உலோகங்களை வழங்க சீனா ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு ஈடாக, சீன மாணவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரின் இறுதி ஒப்புதல் மட்டுமே இனி தேவை.
மே மாதம் ஒப்பந்தமொன்று செய்யப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக சிக்கல்களை சரிசெய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதற்கமைய, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்த அதிக வரிகளில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டன.
ஆனால், சீன ஏற்றுமதிகளை அனுமதிப்பது மற்றும் தொழில்நுட்ப மற்றும் மாணவர் விசாக்களுக்கான அமெரிக்க வரம்புகள் உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்ந்தன.
இதனையடுத்து, இரு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பொருளாதார வர்த்தக நிபுணர்களும் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாகும் நோக்கில் செயற்பட்டனர்.
இந்த ஒப்பந்தம் ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே என நிபுணர்கள் கூறினாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலைத் கட்டுப்படுத்த இது உதவுகின்றது.
எவ்வாறாயினும், அமெரிக்க – சீன உறவை வலுப்படுத்தும் முழுமையான வர்த்தக ஒப்பந்தம் இது அல்ல என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.