4 8
உலகம்செய்திகள்

ஈரானின் அணுஉலைகளை தாக்கிய அமெரிக்கா: ஈரான் கொடுத்த முக்கிய விளக்கம்..!

Share

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்ததையடுத்து அமெரிக்காவும் இந்த தாக்குதலில் உள்நுழைந்துள்ளது.

ஈரானின் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் உள்ளிட்ட மூன்று தளங்களை அமெரிக்கா நேற்றையதினம் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், Fordow is gone என்பதன் மூலம் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை ட்ரம்ப் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், ட்ரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.

ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது என்று ஈரானின் கோம் மாகாண செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், ஈரான் மீதான அதிரடி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பை மிக தீவிரப்படுத்தி வருவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...