5 1 scaled
உலகம்செய்திகள்

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

Share

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் விரக்தியில் மனைவிக்கு போன் செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம், தமிழகத்தில் உள்ள சென்னை காசிமேடு விநாயகபுரம் 1-வது பகுதியைச் சேர்ந்த ரகுமான்(38) என்பவரும், சாமுண்டீஸ்வரி என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், எவர்சில்வர் பட்டறையில் பாலிஸ் போடும் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை மாத தவணையாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில், சரியாக வேலை இல்லாத காரணத்தினால் சில மாதங்களாக பணத்தை செலுத்த முடியவில்லை.

அதனால், வங்கி ஊழியர்கள் ரகுமானின் வீட்டிற்கு வந்து பணத்தை தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ரகுமான் தனது மனைவிக்கு போன் செய்து, வங்கி ஊழியர்கள் பணத்தை தருமாறு மிரட்டி வருகின்றனர். குழந்தைகளையும், குடும்பத்தையும் பார்த்து கொள். நான் தூக்கிட்டு தற்கொலை செய்ய போகிறேன் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பார்க்கும் படி கூறியுள்ளார். அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, ரகுமான் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனிடையே, ரகுமான் உறவினர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டல் கொடுத்த ஊழியர்களிடம் பணம் ரெடியாக இருக்கிறது, வாங்கிக் கொள் என கூறியுள்ளனர்.

அதை வாங்க ஊழியர்கள் வந்த போது, அவர்களை பிடித்து காசிமேடு பொலிசில் ஒப்படைத்தனர். இது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...