5 1 scaled
உலகம்செய்திகள்

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

Share

கடனைக் கட்ட வங்கி ஊழியர் தொந்தரவு! கணவர் தற்கொலை

வங்கியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் விரக்தியில் மனைவிக்கு போன் செய்து விட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம், தமிழகத்தில் உள்ள சென்னை காசிமேடு விநாயகபுரம் 1-வது பகுதியைச் சேர்ந்த ரகுமான்(38) என்பவரும், சாமுண்டீஸ்வரி என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர், எவர்சில்வர் பட்டறையில் பாலிஸ் போடும் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை மாத தவணையாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில், சரியாக வேலை இல்லாத காரணத்தினால் சில மாதங்களாக பணத்தை செலுத்த முடியவில்லை.

அதனால், வங்கி ஊழியர்கள் ரகுமானின் வீட்டிற்கு வந்து பணத்தை தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ரகுமான் தனது மனைவிக்கு போன் செய்து, வங்கி ஊழியர்கள் பணத்தை தருமாறு மிரட்டி வருகின்றனர். குழந்தைகளையும், குடும்பத்தையும் பார்த்து கொள். நான் தூக்கிட்டு தற்கொலை செய்ய போகிறேன் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பார்க்கும் படி கூறியுள்ளார். அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, ரகுமான் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனிடையே, ரகுமான் உறவினர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு மிரட்டல் கொடுத்த ஊழியர்களிடம் பணம் ரெடியாக இருக்கிறது, வாங்கிக் கொள் என கூறியுள்ளனர்.

அதை வாங்க ஊழியர்கள் வந்த போது, அவர்களை பிடித்து காசிமேடு பொலிசில் ஒப்படைத்தனர். இது பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...